அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு    

திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 8:05 am IST

திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
 திருமங்கலம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் மனைவி ரமணி(55). இவர் விருதுநகரில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் திருமங்கலம் வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது ராஜாஜி சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த  5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.