இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கோரி மனு

மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கோரிய மனுவை பிப். 28க்குள் பரிசீலித்து 

Updated On :23 ஜனவரி 2019, 7:30 am IST

மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கோரிய மனுவை பிப். 28க்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக சிறைத் துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த  மனு: நான் மதுரை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ளேன். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். என் போன்று சிறையில் உள்ளவர்களுக்கு தொலைக்காட்சி செய்தி பார்ப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. 
இந்நிலையில், மதுரை மந்திய சிறையில் காலாவதியான பழைய முறையில் ஆண்டனா முறையில்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனால் எனது தாய்மொழியான தமிழ் மொழியில் செய்திகள்,  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. எனவே, பிற சிறைகளில் உள்ளதுபோல் மதுரை மத்திய சிறையிலும் டிஜிட்டல் முறையில் பொதிகை  உள்ளிட்ட தமிழ் சேனல்கள் ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை பிப். 28-க்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சிறைத் துறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.