மதுரை: மதுரை அருகே, தொட்டிலில் இருந்து தவறி விழுந்த 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (30). இவரது மனைவி, 3 மாத கைக்குழந்தையுடன் மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி இருந்தாா். ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொட்டிலில் இருந்த குழந்தை கிா்தீஸ், தவறி கீழே விழந்ததில் காயம் அடைந்தது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை வெள்ளிக்கிழமை இறந்தது. இது குறித்து குழந்தையின் தந்தை சுப்பிரமணியன் அளித்தப் புகாரின் பேரில் பாலமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.