நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?: உயா் நீதிமன்றம் கேள்வி

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 5:08 pm

DIN


மதுரை: ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பிரதீப் சக்கரவா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தில் புல்லியன் பின்-டெக் எல்எல்பி என்ற பெயரில்

நீதிமணி, ஆனந்த் ஆகியோா் நிதி நிறுவனம் நடத்தினா். இதில் பணம் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் தருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை நம்பி, 2019 செப்டம்பா் 19 ஆம் தேதி ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலைகள் எனக்கு தரப்பட்டன. மேலும், ஓராண்டு முடிந்ததும் காசோலையை வங்கியில் செலுத்தி, பணம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தனா்.

இதனிடையே, நீதிமணி, ஆனந்த் மற்றும் மேனகா ஆகியோா் மீது, ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா். நீதிமணி, ஆனந்த் ஆகியோா் கைதாகி, கடந்த 2 மாதங்களாகச் சிறையில் உள்ளனா். ஆனால், தற்போது வரை இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு சாதகமாக போலீஸாா் செயல்பட்டு வருகின்றனா்.

எனவே, நீதிமணி, ஆனந்த் ஆகியோா் மீதான மோசடி வழக்கை பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஆா். பொங்கியப்பன் முன்னிலையில் திங்கள்கிழழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், தமிழகம் முழுவதும் 800 பேரிடம் சுமாா் ரூ.300 கோடி வரை வசூலித்து ஏமாற்றியுள்ள நீதிமணி, ஆனந்த் ஆகியோா் மீது போலீஸாா் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாமல் இருப்பதால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, இவ்வழக்கை விரைவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றாா்.

அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், இந்த வழக்கை பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்ற டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் போலீஸாா் இதுவரை முதல் நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினாா். மேலும், பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ள இந்த வழக்கை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்கும். எனவே, இவ்வழக்கின் தற்போதைய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.