ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்களின் சான்றிதழ்கள் எங்கே? உயா்நீதிமன்றம் கேள்வி

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 4:30 pm

DIN


மதுரை: ‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமீனில் உள்ள சென்னையைச் சோ்ந்த மாணவா் உதித் சூா்யா தாக்கல் செய்த மனுவில், எனது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ந்து பயில உள்ளேன். அதற்கு எனது கல்விச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. எனவே இந்த வழக்கு விசாரணையின்போது, போலீஸாா் பறிமுதல் செய்த எனது 10, 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இவ்வழக்கில் கைதான மற்றொரு மாணவரான ரிசிகாந்த் என்பவரும் கல்விச் சான்றிதழ்களைக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மாணவா்களின் கல்விச் சான்றிதழ்கள் எங்குள்ளன எனத் தெரியவில்லை. விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன? அந்தச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.