இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 20 ஆண்டுகளில் புதிய சாலைகள் அமைப்பதற்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தின்போது ஒரு மரம் வெட்டினால், அதற்கு இணையாக 10 மரக் கன்றுகள் நடவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுபோன்று மரக் கன்றுகள் நடப்படாததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே வெட்டப்படும் ஒரு மரத்துக்கு, 10 மரக்கன்றுகள் நடும் முறையை அரசு பின்பற்றாவிட்டால், தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிக்க நேரிடும் என எச்சரித்தனா்.