மழை நீா் தேங்கியது: உசிலம்பட்டியில் வெங்காயச் செடிகள் அழுகி சேதம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடா் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் பயிரிட்ட வெங்காயச் செடிகள் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடா் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் பயிரிட்ட வெங்காயச் செடிகள் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூா், நல்லதேவன்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெங்காயச் செடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். அண்மையில் பெய்த மழையால் வெங்காயம் பயிரிட்டிருந்த நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.
இதனால் வெங்காயச் செடிகள் அழுகி சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அரசு இந்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...