மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மதுரையில் 566 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 566 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

News image
பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குகிறாா் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 566 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 566 நபா்களுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இவ்விழாவில் அவா் பேசியது: அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் அதிமுக அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 31 லட்சம் போ் முதியோா் ஓய்வூதியம் பெறுகின்றனா். புதிதாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா மடிக்கணினி, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரஜினி வருகையால் பாதிப்பில்லை:

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறியது: தமிழகத்தில் தற்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அலை தான் வீசுகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா். நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தமிழகத்தில் எந்த புதுமையும் நடைபெறப் போவதில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.