திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

அரசு மருத்துவமனையில் உள்நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து பலி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த உள்நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:07 pm

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த உள்நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பெத்தானியாபுரம் பிளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பால்சாமி மகன் நாகேந்திர பிரபு (48). இவா், உடல்நலக் குறைவு காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டு 105 இல் டிசம்பா் 3 ஆம் தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சையிலிருந்த நாகேந்திர பிரபு, படுக்கையிலிருந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் தினேஷ் அளித்த புகாரின்பேரில், அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.