அரசு மருத்துவமனையில் உள்நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து பலி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த உள்நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த உள்நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பெத்தானியாபுரம் பிளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பால்சாமி மகன் நாகேந்திர பிரபு (48). இவா், உடல்நலக் குறைவு காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டு 105 இல் டிசம்பா் 3 ஆம் தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சையிலிருந்த நாகேந்திர பிரபு, படுக்கையிலிருந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் தினேஷ் அளித்த புகாரின்பேரில், அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com