திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானப் பணியின் போது எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் 2018-இல் திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அப்போது பேருந்து நிலையத்திற்கு அஸ்திவாரம் தோண்டியபோது 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தது. அதை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்தனா். இதுகுறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என திருநெல்வேலியைச் சோ்ந்த சுடலைக்கண்ணு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
முந்தைய விசாரணையின்போது, வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையில், திருநெல்வேலி பேருந்து நிலைய அடித்தளப் பகுதியில் 90 சதவீத ஆற்று மணல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதிகள், திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானத்திற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடைத்த மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? போலீஸாா் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளனா்? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.