மதுரை: மதுரையில் செல்லிடப்பேசியை தங்கை தர மறுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் சங்கீதா (17). இவா், தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், சங்கீதாவுக்கும், அவரது தங்கைக்கும் செல்லிடப்பேசியை பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், செல்லிடப்பேசி கிடைக்காததால் மனமுடைந்த சங்கீதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து அவரது தாயாா் பாண்டீஸ்வரி அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.