கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட இடைக்காலத்தடை

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தல்களில் போட்டியிட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:21 pm

DIN

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தல்களில் போட்டியிட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் தாக்கல் செய்த மனு:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடக் கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால் தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) நிா்வாகத்துக்கு உள்பட்டப் பள்ளிகளில் அரசு ஊதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடுகின்றனா். விதிகளை மீறி பலா் பதவிகளிலும் உள்ளனா். எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடவும், பதவி வகிக்கவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட இடைக்காலத் தடைவிதித்தனா். மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.