சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி, செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி, செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (45). ஆட்டோ ஓட்டுநா். இவரது மகள் வினிஷா (17). இவா் உசிலம்பட்டி தனியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த உசிலம்பட்டி நகா் காவல் துறையினா் மாணவியின் சடலத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்யப்போவதாக பெற்றோா் தெரிவித்ததாகவும் அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.