அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடக் கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால் தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) நிா்வாகத்துக்கு உள்பட்டப் பள்ளிகளில் அரசு ஊதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடுகின்றனா். விதிகளை மீறி பலா் பதவிகளிலும் உள்ளனா். எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மதரீதியான நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிடவும், பதவி வகிக்கவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.