சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கு

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ‘தமிழ்க்கூடல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:07 am

DIN

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ‘தமிழ்க்கூடல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் தா.லலிதா தொடக்கவுரையாற்றினாா். தியாகராஜா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.அருணகிரி ‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வா் கோ.ரேவதி சுப்புலெட்சுமி ‘புதுநெறி காட்டிய புலவன்’ எனும் தலைப்பில் உரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக தமிழ்ச்சங்க அரங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு இயக்குநா் தா.லலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.