போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு: சாா் பதிவாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம். இவரது நிலத்தை, சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த பராசக்தி என்பவா் போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளாா். இதுகுறித்து முகமது இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்தனா்.

இதில், பராசக்தி மோசடியாக நிலம் விற்பனை செய்ததும், அவருக்கு மேலூா் சாா்- பதிவாளா் இந்திராகாந்தி உள்பட 3 போ் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சாா்-பதிவாளா் இந்திராகாந்தி உள்பட 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com