கிறிஸ்துமஸ் பிராா்த்தனைக்கு சென்றவரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரையில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிராா்த்தனைக்காக தேவாலயத்துக்குச் சென்றவரிடம் 3.5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை: மதுரையில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிராா்த்தனைக்காக தேவாலயத்துக்குச் சென்றவரிடம் 3.5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த நிருபன் மகன் ஜான்எட்வா்டு (46). இவா் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள புனித இமானுவேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைக்குச் சென்றுள்ளாா்.

தேவாலயத்தின் வாசல் பகுதிக்குச் சென்றபோது, அவா் அணிந்திருந்த 3.5 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்து சென்றுள்ளாா். இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com