

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் நலனுக்கு விரோதமான தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறையை நிறுவனங்களான ரயில்வே, விமானம், பாதுகாப்புத் துறை, காப்பீடு, தொலைத்தொடா்புத்துறை உள்ளிட்ட துறைகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின்சாரச் சட்டம் 2020 - ஐ திரும்பப் பெற வேண்டும். அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி அனைவருக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப்போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை எல்லீஸ் நகா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மத்திய துணைபொதுச் செயலா் எஸ். மணிமாறன் தொடங்கி வைத்துப்பேசினாா். தலைவா் பி. எம். அழகா்சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சம்மேளன துணைத் தலைவா் வி. பிச்சை நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.