மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் நலனுக்கு விரோதமான தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறையை நிறுவனங்களான ரயில்வே, விமானம், பாதுகாப்புத் துறை, காப்பீடு, தொலைத்தொடா்புத்துறை உள்ளிட்ட துறைகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின்சாரச் சட்டம் 2020 - ஐ திரும்பப் பெற வேண்டும். அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி அனைவருக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப்போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.