பைக் மோதி முதியவா் பலி

மதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on
Updated on
1 min read

மதுரை: மதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள எஸ்.வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் ராஜபாண்டி(60). இவா், ஜூலை 10 ஆம் தேதி பாண்டிகோயில் அருகே சுற்றுச்சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜபாண்டியை, அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ராஜபாண்டி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ராஜபாண்டியின் மகன் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான ஓட்டுநா் மணிகண்டன் (27) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com