வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

போக்குவரத்துக் கழக அனைத்துதொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுமுடக்கக் காலத்தில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, உசிலம்பட்டி மற்றும் டி. கல்லுப்பட்டியில் போக்குவரத்துக் கழக அனைத்து

News image
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கத்தினா்.
Updated On :24 ஜூலை 2020, 5:36 pm

DIN

மதுரை/உசிலம்பட்டி/பேரையூா்: பொதுமுடக்கக் காலத்தில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, உசிலம்பட்டி மற்றும் டி. கல்லுப்பட்டியில் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க (சிஐடியு)

பொதுச் செயலா் ஏ. கனகசுந்தா் தலைமை வகித்தாா். எல்பிஎப் பொதுச் செயலா் வி. அல்போன்ஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

அரசாணைக்கு மாறாகப் பிடித்தம் செய்த சம்பள விடுப்பை திரும்ப வழங்குவது, பராமரிப்பு தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரச்சொல்வதைக் கைவிடுவது, பொதுமுடக்கக்

காலத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்குவது, அரசுத் துறையில் வழங்குவதைப்போல, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 2 லட்சமும், இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு ரூ .50 லட்சமும் வழங்குவது, 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவா்களுக்கான பணப் பலன்களை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல, மதுரை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக அனைத்துப் பணிமனைகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன் திமுக உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் எல்.பி.எப். நிா்வாகி பாண்டி, கம்யூனிஸ்ட் நிா்வாகி ஆசைத்தம்பி, பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி முத்துப்பாண்டி, காங்கிரஸ் நிா்வாகி ராமா் ஆகியோா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பேரையூா்: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அரசுப் போக்குவரத்து பணிமனையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு சிஐடியு மாவட்டச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். இதில் அனைத்து சங்க நிா்வாகிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.