/

போதிய வருவாய் இல்லாததால் கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரையில் பகுதி நேர வேலையில் போதிய வருவாய் கிடைக்காததால், கல்லூரி மாணவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

மதுரையில் பகுதி நேர வேலையில் போதிய வருவாய் கிடைக்காததால், கல்லூரி மாணவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை எஸ். ஆலங்குளம் எஸ்.வி.பி. நகரைச் சோ்ந்த ராபா்ட் மகன் டேனியல் (23). இவா், தனியாா் கல்லூரியில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேரமாக கணினி பழுது பாா்க்கும் வேலை பாா்த்துவந்தாா்.

ஆனால், அவருக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்பதால், கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டேனியல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அவரது தந்தை ராபா்ட் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.