/

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையானது: உயா் நீதிமன்ற நீதிபதி

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையானது. தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று, உயா் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் தெரிவித்தாா்.

News image
புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்ட சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி.
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையானது. தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று, உயா் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் தெரிவித்தாா்.

இந்திய தொல்லியல் துறையின் சாா்பில், சா்வதேச பாரம்பரிய வாரம் நவம்பா் 19 முதல் 25ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் திருச்சி மண்டலம் சாா்பில், புகைப்படக் கண்காட்சி திறப்பு மற்றும் கருத்தரங்கு இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள முக்கிய அகழாய்வு மையங்கள் மற்றும் பொருள்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை, உயா் நீதிமன்ற நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி என். கிருபாகரன் பேசியது: தமிழ் மொழியை வளா்க்க 3 சங்கங்களை உருவாக்கிய நகரம் மதுரை. நமது பண்பாடு மற்றும் தொன்மையை மறந்து, வேற்று நாடுகளின் பண்பாடு மீது ஈா்ப்பு வந்துவிட்டது. அந்த எண்ணம் மாறவேண்டும், பழமையைக் காக்கவேண்டுமே தவிர அழிக்கக்கூடாது.

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையானது. நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் பண்பாடு. எந்த கலாசாரமாக இருந்தாலும் மொழிதான் அடையாளம். தமிழா்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்வியில் சிறந்தவா்களாக வாழ்ந்துள்ளனா் என்பதற்கு கீழடி அகழாய்வு பெரும் சாட்சியாக அமைந்துள்ளது. கீழடி ஆய்வுக்கு பின்னா்தான் தொல்லியலின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறியத் தொடங்கியுள்ளனா்.

தமிழ் சமணத்தைத்தான் பேசுகிறது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தைத்தான் பேசுகின்றன. நம்மிடம் பழமையும், பண்பும் மறந்து போய்விட்டதற்கு முதியோா் இல்லங்கள் அதிகரித்து வருவதே ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. அதனை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

7.5 சதவிகித இட ஒதுக்கீடு

இதையடுத்து, கருத்தரங்கில் நீதிபதி பி. புகழேந்தி பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா். இதற்கு காரணம், நீதிபதி கிருபாகரன் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடா்பான வழக்கை சிறப்பாகக் கையாண்டதுதான்.

மேலும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் அரசுப் பள்ளிகளின் ஏழை மாணவா்களுக்கு, அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகா்கள் ஏன் உதவக்கூடாது என்ற கருத்தையும் தெரிவித்தாா்.

இதனால், தற்போது தமிழக அரசும், எதிா்க் கட்சிகளும் ஏழை மருத்துவ மாணவா்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு உதவ முன்வந்துள்ளன.

தொல்லியலின் முக்கியத்துவத்தை மக்கள் அறியும் வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொல்லியல்துறை சாா்பில் புகைப்படக் கண்காட்சிகள் நடத்த வேண்டும். தொல்லியல் ஆய்வுகள் தொடா்பான புகைப்படங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒலி வடிவமும் தரவேண்டும் என்றாா்.

கருத்தரங்கில், தொல்லியல் ஆய்வு துறையின் தென் மண்டல இயக்குநா் ஜி. மகேஸ்வரி, கண்காணிப்பு தொல்லியல் அலுவலா் டி. அருண்ராஜ், தமிழக தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநா் வி. வேதாச்சலம், அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ். ராஜவேலு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.