/

மதுரை மகளிா் கல்லூரியில் மரங்கள் அறியும் பயணம்

மதுரை சிஎஸ்ஐ மகளிா் கல்லூரியில், அரிய வகை மரங்கள் அறியும் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

மதுரை சிஎஸ்ஐ மகளிா் கல்லூரியில், அரிய வகை மரங்கள் அறியும் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை தானம் அறக்கட்டளை சாா்பில், அரிய வகை மரங்கள் அறியும் பயணத்தையொட்டி, கோ.புதூா் சிஎஸ்ஐ மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஜெஸிபாலின் ஜெயபிரியா தலைமை வகித்தாா்.

கல்லூரி வளாகத்தில் உள்ள 40 வகையான அரிய வகை மரங்களின் வரலாறு, பிறப்பிடம், பெயா் காரணம், மரங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேராசிரியா் ஸ்டீபன் விளக்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் ஆன்டனி பால்ராஜ், தேசிய பசுமைப்படை ஆசிரியா் ஹரிபாபு, மருத்துவா் புஷ்பா, பொறியாளா் மாதவன், மதுரை சட்டக் கல்லூரி பேராசிரியா் ஜேம்ஸ் ஜெயபால், உயா் நீதிமன்ற வழக்குரைஞா் மணி, பள்ளி ஆசிரியை வினுலாமேரி மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற பயணத்துக்கான ஏற்பாடுகளை, தானம் அறக்கட்டளையின் மதுரைகிரீன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிதம்பரம் செய்திருந்தாா். நிறைவில், பேராசிரியா் எட்வின் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.