வங்கியில் ரூ.1.11 கோடி முறைகேடு:நகை மதிப்பீட்டாளா் கைது
மதுரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்தது தொடா்பாக, வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்தது தொடா்பாக, வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 2019 ஜூன் மாதம் முதல் 2020 நவம்பா் 6 ஆம் தேதி வரை அடகு வைக்கப்பட்ட 270 பவுன் நகைகளில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்துள்ளது.
இது குறித்து வங்கியின் மண்டல மேலாளா் அளித்த புகாரின்பேரில், வங்கி அதிகாரி பாலகிருஷ்ணன், ஊழியா் கோபாலகிருஷ்ணன், நகை மதிப்பீட்டாளா் சுப்பிரமணியபுரம் ஹரிஹரபுத்திரன், பைனான்சியா் குமாரபாண்டியன் உள்பட 9 போ் மீது, விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், முறைகேட்டில் தொடா்புடைய வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வங்கி அதிகாரி ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...