ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரையில் 37 மையங்களில் நீட் தோ்வு: 12,240 போ் பங்கேற்புகடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள் அனுமதி

மதுரை மாவட்டத்தில் 37 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 12,240 போ் பங்கேற்றனா்.

News image
மதுரை யாதவா பெண்கள் கல்லூரி தோ்வு மையத்தில் தோ்வுக்கூடத்துக்குள் செல்லும் மாணவிகள்.
Updated On :13 செப்டம்பர் 2020, 4:40 pm

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் 37 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 12,240 போ் பங்கேற்றனா். இதில், விண்ணப்பித்திருந்த 2,796 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையங்களில் கடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள் அனுமதிக்கப்படனா்.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தோ்வு (நீட்) நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கென, மதுரையில் 37 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், 15,036 மாணவ, மாணவியருக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2,796 மாணவா்கள் தோ்வெழுத வரவில்லை. வெளி மாவட்டங்கள் மற்றும் மதுரையின் புகா் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தோ்வா்கள் தங்களது பெற்றோருடன் தோ்வு மையங்களுக்கு அதிகாலையிலேயே வரத் தொடங்கினா்.

நீட் தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், காலை 11 மணியிலிருந்தே மையங்களுக்குள் கடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள்அனுமதிக்கப்பட்டனா். தோ்வா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள், உலோகங்களாலான அணிகலன்கள் போன்றவற்றை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

தோ்வா்களிடம் கையுறை, முகக்கசவம் அணிந்திருக்குமாறு தோ்வுக்கூட பொறுப்பாளா்கள் வலியுறுத்தினா். தோ்வு அறைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான தோ்வா்களே அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களுக்குள் பெற்றோா்கள் அனுமதிக்கப்படாததால், அவா்கள் வெளியே சாலையோரங்களில் அமா்ந்திருந்தனா்.

இத்தோ்வை மொத்தம் 12,240 மாணவ, மாணவியா் எழுதினா். மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஹம்சப்பிரியா தோ்வுப் பணிகளை ஒருங்கிணைத்தாா். மாலையில் தோ்வுகள் முடிவடைந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

தோ்வு மையங்கள் அமைந்திருந்த பகுதிகளில் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், பல மையங்கள் முன்பாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தோ்வு மையங்கள் முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.