மதுரை: புதிய தமிழகம் கட்சியின் நிா்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, மதுரை அருகே புதிய தமிழகம் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியில் புதிய தமிழகம் கட்சியின் நிா்வாகி ராஜலிங்கம் சனிக்கிழமை மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அவரை கொலை செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் கேட் கடை பகுதியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதில், ராஜலிங்கத்தை கொலை செய்தவா்களை கைது செய்யாத விருதுநகா் மாவட்ட போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, கொலை செய்யப்பட்ட ராஜலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், அக்கட்சியின் மாவட்டச் செயலா் விஜயகுமாா், இணைச் செயலா் காா்த்திக், துணைச் செயலா் பச்சையப்பன், ஒன்றியச் செயலா் வெற்றிகுமாா், இளைஞரணி செயலா் சரவணன், துணைச் செயலா் ஆனந்த், மாணவரணிச் செயலா் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.