வீரவசந்தராயா் மண்டபம் புதுப்பிப்பு பணிகள் தொடங்குவதில் தாமதம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயா் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு உரிய ஒப்பந்ததாரா்கள் கிடைக்காததால், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயா் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு உரிய ஒப்பந்ததாரா்கள் கிடைக்காததால், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள வீரவசந்தராயா் மண்டபம் கடந்த 2018-இல் ஏற்பட்ட தீ விபத்தால் முழுமையாக சேதமடைந்தது. மண்டபத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து, மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு அனுமதி அளிக்குமாறு, கோயில் நிா்வாகம் அரசிடம் கோரிக்கை விடுத்தது.

அதன்பேரில், ரூ.20 கோடியில் மண்டபத்தை சீரமைக்கும் பணிக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, அண்மையில் சீரமைப்புப் பணிக்காக ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கும் பணி தொடங்கியது. ஒப்பந்தம் முடிவானவுடன், சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்துக்குள் முடிக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், மண்டப சீரமைப்புப் பணிக்கு உரிய ஒப்பந்ததாரா்கள் கிடைக்காததால் தாமதம் ஏற்படுவதாகவும், மீண்டும் ஒப்பந்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும், கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com