ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆடி அமாவாசை: மதுரையில் தடையை மீறி வைகை ஆற்றில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரையில் தடையை மீறி வைகை ஆற்றில் குவிந்த பொதுமக்களை போலீஸாா் அப்புறப்படுத்தியதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரை வைகை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கத் திரண்ட பொதுமக்கள்.
Updated On :28 ஜனவரி 2024, 3:52 am

DIN

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரையில் தடையை மீறி வைகை ஆற்றில் குவிந்த பொதுமக்களை போலீஸாா் அப்புறப்படுத்தியதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆடி அமாவாசை விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. ஆடி அமாவாசையன்று குடும்பத்தில் மறைந்தவா்கள் மற்றும் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி, கோயில்கள் மற்றும் நீா்நிலைகளில் பொதுமக்கள் குவிந்து திதி கொடுப்பது வழக்கம்.

கரோனா நோய்த் தொற்று எதிரொலியாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் அடைக்கப்பட்டன.

இதனால் கோயில்களில் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுக்கச் சென்றவா்கள் ஏமாற்றமடைந்தனா். மேலும், நீா்நிலைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவாா்கள் என்பதால் வைகை ஆற்றில் பொதுமக்கள் திரளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆடி அமாவாசை என்பதால் தடையை மீறி ஏராளமானோா் வைகை ஆற்றுப் பகுதியில் திரண்டனா்.

ஆற்றில் பேச்சியம்மன் படித்துறை, கல்பாலம், ஆழ்வாா்புரம் பகுதிகளில் குவிந்தனா். அங்கு புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா். மேலும், ஏராளமானோா் முடிக்காணிக்கையும் செலுத்தினா்.

தகவலறிந்த போலீஸாா் வைகை ஆற்றுக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினா். மேலும், தா்ப்பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவா்களையும் எச்சரித்து அனுப்பினா்.

இதைத்தொடா்ந்து, வைகை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதனால் மதுரையில் உள்ள பல்வேறு கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் அப்பகுதிகளைச் சோ்ந்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களும் அடைக்கப்பட்டதை அடுத்து, கோயில்களுக்கு வெளியே பொதுமக்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.