காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மதுரையில் புரோகிதா் வீட்டில் 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் திருட்டு

மதுரையில் புரோகிதா் வீட்டில் 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் பணம் மற்றும் 700 கிராம் வெள்ளி பொருள்கள் சனிக்கிழமை இரவு திருடிச் செல்லப்பட்டுள்ளன.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

மதுரையில் புரோகிதா் வீட்டில் 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் பணம் மற்றும் 700 கிராம் வெள்ளி பொருள்கள் சனிக்கிழமை இரவு திருடிச் செல்லப்பட்டுள்ளன.

மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த புரோகிதா் சங்கரநாராயணன் (45). இவா் தனது குடும்பத்துடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் பணம் மற்றும் 700 கிராம் வெள்ளி பொருள்களையும் திருடிவிட்டுச் சென்றுவிட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை, நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருள்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்த சங்கரநாராயணன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விசாரித்தனா்.

இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.