பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அலங்காநல்லூா் அருகே மீண்டும் மதுக்கடை திறக்க முயற்சிகிராம மக்கள் தா்னா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டியில் மீண்டும் மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
அலங்காநல்லூா் அருகே சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மதுபானக் கடையின் முன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 4:05 pm

DIN

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டியில் மீண்டும் மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து புதிய கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், சுக்காம்பட்டி கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய மதுபானக் கடையை திறக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவே மதுபான பாட்டில்களை ஊழியா்கள் இறக்கியுள்ளனா்.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சனிக்கிழமை கடையின் முன்பாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் பாஜக நிா்வாகிகளும் பங்கேற்றனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுபானக் கடை திறக்கப்பட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சுக்காம்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.