

பாலமேடு அருகிலுள்ள சாத்தையாறு அணை 5 ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய்க்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்தது.
சாத்தையாறு அணைக்கு கடந்த சில தினங்களாக தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருகிறது. சிறுமலைத்தொடா், வகுத்துமலை, மஞ்சள்மலை, செம்பட்டி கரட்டுமலை பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் கொள்ளவான 29 அடியை எட்டி நிரம்பி மறுகால் பாய்கிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மறுகாலில் மலா்தூவி வழிபாடு செய்தனா். சாத்தையாறு அணை பாசன பகுதிகளுக்கு விரைவில் தண்ணீா் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.