அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு சிறு மருத்துவமனைகளுக்கு பணியாளா் தோ்வு: தற்போதைய நிலை தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு சிறு மருத்துவமனைக்களுக்கான செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:42 pm

DIN

அரசு சிறு மருத்துவமனைக்களுக்கான செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழக அரசின் சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவப் பணியாளா்களை தனியாா் நிறுவனம் தோ்வு செய்வது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வைரம் சந்தோஷ் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இம்மனு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அரசின் சிறு மருத்துவமனைகளுக்கு தற்காலிகமாக செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள், ஜனவரி 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.மேலும் சிறு மருத்துவமனைகளுக்கான செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வில் தற்போதைய நிலையே தொடரவும், மேல்நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.