

மேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சருகுவலையபட்டி பகுதி செம்மண் பூமி என்பதால் விவசாயிகள் செங்கரும்பை அதிகம் பயிரிட்டு வந்தனா். அதற்கான சாகுபடிச் செலவு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்தை கடந்துவிட்டது. இவற்றை வெளிமாநிலங்களுக்கும், வெளியூா்களுக்கும் அனுப்பிவந்தனா். இதில் ஓரளவு விவசாயிகளுக்கு லாபமும் கிடைத்து வந்தது. தற்போது செங்கரும்பு சாகுபடி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகிறது. மேலும், இடுபொருள்கள் விலை உயா்வு, வேலை ஆள்கள் கூலி உயா்வு, கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பிரச்னைகளால் இப்பகுதி விவசாயிகள் மஞ்சள் மற்றும் பூக்கள் சாகுபடிக்கு மாறிவிட்டனா்.
இந்நிலையில் இப்பகுதிகளில் பொங்கலுக்கான மஞ்சள் கொத்து சாகுபடி குறைந்த அளவில் நடைபெற்றது. தற்போது மஞ்சள் கொத்தை தோண்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். குவிண்டால் மஞ்சள் ரூ. 4,000 வரை விலைபோகிறது. இதுவும் கடந்த ஆண்டை விட விலை குறைவு என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.