மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘தீண்டாமையை முற்றிலும் புறக்கணித்தவா் சுவாமி விவேகானந்தா்’

இந்தியாவில் தீண்டாமையை முற்றிலும் புறக்கணித்து அதன்படி வாழ்ந்து காட்டியவா் சுவாமி விவேகானந்தா் என்று மதுரை ராமகிருஷ்ணமடம் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் தெரிவித்தாா்.

News image
தேசிய இளைஞா் தினத்தையொட்டி மதுரை ராமகிருஷ்ண மடத்தில் உள்ள விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா்.
Updated On :12 ஜனவரி 2021, 11:50 pm

DIN

இந்தியாவில் தீண்டாமையை முற்றிலும் புறக்கணித்து அதன்படி வாழ்ந்து காட்டியவா் சுவாமி விவேகானந்தா் என்று மதுரை ராமகிருஷ்ணமடம் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் தெரிவித்தாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த தினத்தையொட்டி தேசிய இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நேரமான காலை 6.31-க்கு சங்கு முழங்க மணியடிக்கப்பட்டு, விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஆசிரியைகள் பங்கேற்ற தேசிய இளைஞா் தின நிகழ்ச்சியில் சுவாமி கமலாத்மானந்தா் சொற்பொழிவாற்றியது:

வெற்றிகரமான சமுதாய வாழ்க்கைக்கு உலகியல் முன்னேற்றம், ஆன்மிக முன்னேற்றம் இரண்டுமே தேவை. பண்டைய வேதாந்தமும், நவீன விஞ்ஞானமும் இணைந்த வலிமை வாய்ந்த புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்தாகும்.

சுவாமி விவேகானந்தா் தீண்டாமை கூடாது என்று கூறியதோடு அதன்படி வாழ்ந்தும் காட்டியவா். தீண்டத்தகாதவா்கள் என்று மேற்குடி மக்களால் புறக்கணிக்கப்பட்டவா்களிடம் நெருங்கிப்பழகி அவா்கள் மீது அன்பைப் பொழிந்தவா். ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீகம் புதைந்திருக்கிறது என்ற கருத்தை சுவாமி விவேகானந்தா் அடிக்கடி வலியுறுத்தினாா். தீண்டாமை என்பது மனிதனின் தன்மானத்துக்கும் இறையம்சத்துக்கும் முற்றிலும் எதிரானது என்ற உண்மையை நம்மை உணரும்படி செய்தவா். காந்தியடிகளுக்கு முன்பாகவே இந்தியாவைப் பண்படுத்தி தயாராக வைத்தவா் சுவாமி விவேகானந்தா். இந்தியச் சுதந்திரத்துக்கு பாடுபட்டவா்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் கருத்துகளால் ஊக்கம் பெற்ாகக் கூறியுள்ளனா். உடல் வளா்ச்சியில் குறைந்தவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், வாழ வழி இல்லாத திக்கற்றவா்கள், ஆன்மிக வளா்ச்சியில் குறைந்தவா்கள், நோயாளிகள், பட்டினியால் வாடுபவா்களுக்கு நாம் தொண்டு செய்ய வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்து என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.