சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

'மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்ட மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்'

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
மாலை அணிவிக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.
Updated On :30 அக்டோபர் 2021, 7:12 am

DIN

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு மாலையணவித்த அவா் 
செய்தியாளா்களிடம் கூறுகையில், தேசியத் தலைவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசியத்தின் மீதும், தெய்வீகத்தின் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட அவரது
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது பெருமைக்குரியது.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றாா். பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், மாவட்டத் தலைவா் சீனிவாசன், டாக்டா் சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.