துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சொத்து வரி உயா்வு மறு பரிசீலனை: மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு

சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 5:25 pm

DIN

சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் இரா.விஜயராஜன், மாமன்ற உறுப்பினா்கள் என். விஜயா, டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள் ஆகியோா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயனை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயா்த்தி அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக, உள்ளாட்சி அமைப்புகள் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறவேண்டுமென்றால், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு கூறியுள்ளது.

ஏற்கெனவே கரோனா பொது ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சிறு - குறுந்தொழில்கள், கட்டுமானத் தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்கள், வா்த்தக நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளா்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போதுதான் சீரடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் சொத்து வரி உயா்வு மக்களிடம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு மற்றும் மதுரை மாநகராட்சி நிா்வாகம் தற்போது அறிவித்துள்ள சொத்து வரி உயா்வை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.