கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

குற்றவழக்குகளில் 90 நாள்களில் இறுதி அறிக்கை: காவல் துறையினருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் 90 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:39 pm

DIN

குற்ற வழக்குகளில் 90 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த நிஷா, தனது தந்தைய ராஜபாண்டியனை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணா்வு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் தந்தை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் கடந்த 2021 ஜூலை 31ஆம் தேதி, தந்தையின் குண்டா் சட்டத்தை ரத்து செய்வது தொடா்பாக மனு அளித்துள்ளாா். அந்த மனு, 2021 அக்டோபா் 28 ஆம் தேதி, அரசு விடுமுறை நாள்கள் 22 போக, 41 நாள்கள் கால தாமதமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இவ்வாறு காலதாமதம்

செய்வது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இவ்வழக்கில் இறுதி அறிக்கையானது, 90 நாள்களுக்குப் பிறகே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் தந்தை ராஜபாண்டியன் மீதான குண்டா் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து நீதிபதிகள், காவல் துறையினா் இறுதி அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் எளிதாக ஜாமீன் பெற்றுவிடுகின்றனா். இதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் விதிகளின் படி 90 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இது குண்டா் சட்ட வழக்குகளுக்கும் பொருந்தும்.

குற்றவியல் நீதிமன்றங்களில் , டி.என்.ஏ, ரசாயனம், உள்ளுறுப்பு, உயிரியல் போன்ற பரிசோதனை அறிக்கைகள் இல்லை என்பதற்காக, இறுதி அறிக்கைகளை திருப்பி அனுப்பக் கூடாது. இந்த உத்தரவை குற்றவியல் நீதிமன்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக காவல்துறைத் தலைவா் இது தொடா்பான சுற்றறிக்கையை, அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பதிவுத்துறை இந்த உத்தரவுகளை, தலைமை நீதிபதி முன்பாக சமா்ப்பித்து, இதுதொடா்பாக கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.