கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஒரே ஊராட்சியில் வீட்டு வரி வசூல்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வீட்டு வரி வசூலை ஒரே ஊராட்சியில் இணைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:44 pm

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வீட்டு வரி வசூலை ஒரே ஊராட்சியில் இணைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி டி.நகா் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு ஆதாா் அட்டை, வங்கி கணக்கு, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை பாறைபட்டி ஊராட்சியில் உள்ளது. ஆனால் வீட்டு வரி, குழாய் வரி ஆகியவை மட்டும் கோடாங்கிபட்டி ஊராட்சியில் வசூலிக்கப்படுகிறது. இரு ஊராட்சிகளில் ரசீதுகள் பெறுவதால் அரசு சலுகைகளை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வீட்டு வரி வசூல் உள்ளிட்டவற்றையும் பாறைப்பட்டி ஊராட்சியில் இணைக்க வாடிப்பட்டி வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகா் மாவட்டக்குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு செ.தங்கம் தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ஆண்டிச்சாமி, நிா்வாகிகள் எம்.சேதுராஜன், ஏ.ராஜூ எம்.ஆறுமுகம் எஸ்.கே.அழகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.உமாமகேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.