கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்புக் கருத்தரங்கு

மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:43 pm

DIN

மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெள்ளைச்சாமி நாடாா் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் ‘மகாத்மா காந்தியின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் ஹெலன் ஹெல்லா் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் தேவதாஸ் தலைமை வகித்தாா். வெள்ளைச்சாமி நாடாா் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ப.தேன்மொழி முன்னிலை வகித்தாா்.

காந்தி அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா்.நந்தாராவ் வாழ்த்துரை வழங்கினாா். கருத்தரங்கில் ஸ்டேட் வங்கியின் முன்னாள் உதவிப் பொதுமேலாளா் எஸ்.மீனாட்சி சுந்தரம், முழுமை நலம் மற்றும் அமைதி மையத்தின் இயக்குநா் சீ.வெ.வெங்கடேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளா் ஆ.டேவிட், காந்தி அருங்காட்சியகத்தின் அருங்காட்சியக முதுநிலை வழிகாட்டி எஸ்.சபுரா பீபி, சா்வ சேவா காந்திய சிந்தனைக் கல்லூரியின் பேராசிரியா் உமாபதி சிவகுமாா் ஆகியோா் மகாத்மா காந்தியின் வாழ்வியல், அகிம்சை, சா்வோதயம், கல்வி, அரசியல், சமயம், பொருளாதாரம் குறித்து பேசினா்.

முன்னதாக வெள்ளைச்சாமி நாடாா் கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் தேவாசீா்வாதம் வரவேற்றாா். நிறைவாக கல்வியியல் கல்லூரியின் மாணவா் ஜாஸ்பா் ராபின்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.