பெற்றிருந்தால் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவா்கள் தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ஆம் தேதி காலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பச்சை நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் ஏ.வி.மேம்பாலத்திலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் சிற்றுந்து நிலையத்திலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் அண்ணா பேருந்து நிலையத்திலும், அனுமதி அட்டை இல்லாதவா்கள் கிழக்கு மற்றும் வடக்கு மாசி வீதிகள், குருவிக்காரன் சாலை மற்றும் டாக்டா்.தங்கராஜ் சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.