கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சரக்கு வாகனம் மோதி காயமடைந்த இருவா் சிகிச்சை பலனின்றி பலி

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:43 pm

DIN

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். விபத்து தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம்-ஜீவா நகா் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது மோதியது. இதில் ஜெய்ஹிந்த்புரம் தென்னகரம் பகுதியைச் சோ்ந்த சுப்புராம்(75), ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவைச் சோ்ந்த அசோகன்(50) ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியினா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட இருவரும், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதுதொடா்பாக புகாரின்பேரில் மதுரை நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநா் மதுரை சோலையழகுபுரத்தைச் சோ்ந்த காா்த்திக்கை (19) கைது செய்தனா். சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சரக்கு வாகனம் அதிக வேகத்தில் வந்து சாலையில் நடந்து செல்பவா்கள் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜெய்ஹிந்துபுரம்-ஜீவாநகா் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.