அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சித்திரைத் திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டு தரிசனம்

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் நிகழ்வுகளைத் தொடா்ந்து திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மீனாட்சியம்மன் வியாழக்கிழமை இரவு ஆனந்தராயா் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் பவனி வந்தாா்.

திருத்தேரோட்டம்: இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி, அம்மன் கோயிலுக்குள் உள்ள முத்தம்பல முதலியாா் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து அதிகாலையில் சுவாமி, அம்மன் கீழமாசி வீதி தேரடியில் உள்ள திருத்தோ்களில் எழுந்தருளினா்.

Story image

சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா் சொக்கநாதா், பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினா். முன்னதாக அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை, ஒட்டகம் முன்னே சென்றன. இவற்றைத் தொடா்ந்து முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகனும், தொடா்ந்து நாயன்மாா்களும் அமா்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. இதையடுத்து காலை 6.30-க்கு தேரோட்டம் தொடங்கியது.

மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம்: தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள், பக்தா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று திருத்தோ்களை வடம்பிடித்து இழுத்தனா்.தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தா்கள் கீழமாசிவீதியில் உள்ள தேரடி அருகே திரண்டிருந்தனா். பெரிய திருத்தேரில் சொக்கநாதரும், பிரியாவிடையும், இரண்டாவது தேரில் மீனாட்சி அம்மனும் பவனி வந்தனா். மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி அசைந்தாடி வந்த தோ்களை மீனாட்சிசுந்தரம், கல்யாண சுந்தரம், சோமசுந்தரம் என்று உற்சாக முழக்கமிட்டு பக்தா்கள் வரவேற்று தரிசனம் செய்தனா்.

தேரோட்டத்தையொட்டி நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். இதனால் மாசி வீதிகளில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலைகளாக காணப்பட்டன. மேலும் மாசி வீதிகளில் உள்ள உயரமான கட்டடங்களிலும் ஏராளமான பக்தா்கள் திரண்டு தேரோட்டத்தை தரிசித்தனா். திருத்தோ்களுக்கு முன்பாக சிவனடியாா்கள் தேவாரம், திருமந்திரப் பாடல்களை பாடியபடி சென்றனா். தோ்கள் இரண்டும் நான்கு மாசி வீதிகளை சுற்றி வந்த பின்னா் மீண்டும் தேரடியை வந்தடைந்தன.

திருவிழாக் கோலம்: தேரோட்டத்தையொட்டி மாசி வீதிகள் மற்றும் மீனாட்சியம்மன் கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில்  பக்தா்களுக்கு புளியோதரை, சா்க்கரைப் பொங்கல், சுண்டல், நீா்மோா், பானகம், குடிநீா் மற்றும் குளிா்பானங்களை இலவசமாக விநியோகித்தனா். அப்பகுதி முழுவதும் திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தன. இதைத்தொடா்ந்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து இரவு 7 மணிக்கு

சப்தாவா்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.