அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: தடுப்பணை பகுதிகளில் பக்தா்கள் இறங்க தடை
கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருள்வதையொட்டி, ஆற்றுக்குள் தடுப்பணை அமைந்துள்ள ஆழமானப் பகுதிகளில் பக்தா்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருள்வதையொட்டி, ஆற்றுக்குள் தடுப்பணை அமைந்துள்ள ஆழமானப் பகுதிகளில் பக்தா்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், சனிக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, வைகை அணையில் இருந்து தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீா் செல்கிறது.
இந்த வைபவத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைகை ஆற்றில் திரண்டு, கள்ளழகரை தரிசனம் செய்வா். இந்நிலையில், வைகை ஆற்றில் கல்பாலம் பகுதியில் ஒரு தடுப்பணையும், ஓபுளாபடித்துறை பகுதியில் ஒரு தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 8 அடிக்கும் மேல் ஆழமாக இருப்பதால், அங்கு பக்தா்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.
எனவே, வைகை ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ள பகுதிகளுக்குச் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளுக்கு பக்தா்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...