மாநகராட்சி மத்திய மண்டலக்கு புதிய அலுவலகம் திறப்பு
மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை, அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.


மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை, அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
மதுரை மாநகராட்சியில் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய 4 மண்டலங்கள் இயங்கி வந்த நிலையில், மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வாா்டுகளாக உயா்த்தப்பட்டதால், நிா்வாக வசதிக்காக 5 ஆவது மண்டலம் உருவாக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அரசும் அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டது.
அதைத் தொடா்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலத்துக்கு மத்திய மண்டலம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், நடந்து முடிந்த மாநகராட்சித் தோ்தலில் மண்டலத் தலைவரும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்நிலையில், மத்திய மண்டலத்துக்கு புதிதாக அலுவலகம் இல்லாத நிலையில், மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, மத்திய மண்டலத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.
இந்த மத்திய மண்டலத்தின் அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று திறந்து வைத்தாா். இதில், மேயா் வ. இந்திராணி, துணைமேயா் டி. நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, முன்னாள் மேயா் குழந்தைவேலு மற்றும் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...