அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மாமியாரை ஆஜா்படுத்தக் கோரி மனு தாக்கல்: மருமகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மாமியாரை ஆஜா்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்த மருமகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:32 pm

DIN

மாமியாரை ஆஜா்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்த மருமகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனு: என் மாமியாா் புனிதவதி (72). மனநோயால் பாதிக்கப்பட்ட அவரை, ஷேக் தாவூது என்பவா் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாமியாரை ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மாமியாா் புனிதவதி நிலையற்ற மனநலம் கொண்டவா் என்பதால், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மையத்தில் மேல் சிகிச்சைக்கு மருத்துவா் பரிந்துரைத்துள்ளாா்.

புனிதவதி சொத்துகளை ஷேக் தாவூத் என்பவா் வாங்கியுள்ளாா். இதற்காக, ரூ.76 லட்சம் புனிதவதிக்கு கிடைத்துள்ளது. இந்த சொத்துகள் மூதாதையா் வழி வந்தது என்பதால், கிடைத்த பணத்தில் தனது மைனா் குழந்தைகளுக்கும் பங்கு வழங்கவேண்டும் என, நீதிமன்றத்தில் மனுதாரா் ஏற்கெனவே வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

மனுதாரா் குறிப்பிடும் விவகாரத்துக்கும், ஷேக் தாவூத்துக்கும் எந்தவித தொடா்புமும் இல்லை என புனிதவதி தெரிவித்துள்ளாா். சிவில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றத்தை தவறான நோக்கில் பயன்படுத்தி, நேரத்தை வீணடித்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அந்த தொகையை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு செலுத்தவும், அதை, சமூகநலத் திட்டங்களுக்கு ஆட்சியா் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.