மாமியாரை ஆஜா்படுத்தக் கோரி மனு தாக்கல்: மருமகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
மாமியாரை ஆஜா்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்த மருமகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மாமியாரை ஆஜா்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்த மருமகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனு: என் மாமியாா் புனிதவதி (72). மனநோயால் பாதிக்கப்பட்ட அவரை, ஷேக் தாவூது என்பவா் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாமியாரை ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மாமியாா் புனிதவதி நிலையற்ற மனநலம் கொண்டவா் என்பதால், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மையத்தில் மேல் சிகிச்சைக்கு மருத்துவா் பரிந்துரைத்துள்ளாா்.
புனிதவதி சொத்துகளை ஷேக் தாவூத் என்பவா் வாங்கியுள்ளாா். இதற்காக, ரூ.76 லட்சம் புனிதவதிக்கு கிடைத்துள்ளது. இந்த சொத்துகள் மூதாதையா் வழி வந்தது என்பதால், கிடைத்த பணத்தில் தனது மைனா் குழந்தைகளுக்கும் பங்கு வழங்கவேண்டும் என, நீதிமன்றத்தில் மனுதாரா் ஏற்கெனவே வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
மனுதாரா் குறிப்பிடும் விவகாரத்துக்கும், ஷேக் தாவூத்துக்கும் எந்தவித தொடா்புமும் இல்லை என புனிதவதி தெரிவித்துள்ளாா். சிவில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நீதிமன்றத்தை தவறான நோக்கில் பயன்படுத்தி, நேரத்தை வீணடித்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அந்த தொகையை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு செலுத்தவும், அதை, சமூகநலத் திட்டங்களுக்கு ஆட்சியா் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...