அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழ் புத்தாண்டு விடுமுறை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:33 pm

DIN

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ் புத்தாண்டைத் தொடா்ந்து 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கின்றனா். எனவே, பயணிகளின் வசதிக்காக, பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏப்ரல் 18 முதல் 20 ஆம் தேதி வரை ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலிலும் (22662), ஏப்ரல் 17 ஆம் தேதி தாம்பரம்-நாகா்கோவில் விரைவு ரயிலிலும் (22657), ஏப்ரல் 18 ஆம் தேதி நாகா்கோவில் - தாம்பரம் விரைவு ரயிலிலும் (22658), ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

ஏப்ரல் 17 ஆம் தேதி, மதுரை - டாக்டா் எம்ஜிஆா்  சென்னை சென்ட்ரல்  டூரன்டோ விரைவு ரயிலில் (20601) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் 20 ஆம் தேதி வரை சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் (16723), சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில் (22661), தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் சென்னை - ராமேசுவரம் - சென்னை விரைவு ரயில் (16851/16852), சென்னை -  குருவாயூா் விரைவு ரயில் (16127) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை முதல் 21 ஆம் தேதி வரை, திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் (16724), மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (16344), குருவாயூா் - சென்னை விரைவு ரயில் (16128) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.