அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

‘போக்சோ’ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை வெளியிடக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:26 pm

DIN

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்தவா் அஷரப் அலி. இவா் மீது, கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில், புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் அஷரப் அலிக்கு 2019 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிா்த்து, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததில் சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, மனுதாரரின் வயது 70 மற்றும் அவரது அனைத்து சூழ்நிலைகளையும் கவனத்தில்கொண்டு, கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனா்.

தொடா்ந்து நீதிபதிகள், விசாரணையின்போது பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை சிறப்பு நீதிமன்றம் வெளிப்படுத்தக்கூடாது என்பதை போக்சோ சட்டப் பிரிவு கட்டாயமாக்குகிறது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் விதிகள் பின்பற்றப்படவில்லை. போக்சோ வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை, விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவும், சட்ட விதிகளை கடைப்பிடிக்கவும் வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.