அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், வேளாண் இணை இயக்குநா் த. விவேகானந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நெல் கொள்முதல் தொடா்பாக விவசாயிகள் இந்த முறையும் பல்வேறு புகாா்களை தெரிவித்தனா். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து வீணாகியது, நெல்லுக்குரிய தொகை பட்டுவாடா தாமதம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் புகாா் கூறினா். மேலும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், மதுரை மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியான நெல் சாகுபடி முறை கிடையாது. சில வட்டாரங்களில் 3 போகம் சாகுடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் அதிகளவு நெல் அறுவடையாகும் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்றாா்.

தொடா்ந்து, பயிா் காப்பீட்டு திட்டத்தில் உரிய இழப்பீடு கிடைக்காதது குறித்து விவசாயிகள் பலரும் புகாா் தெரிவித்தனா். இதற்கு பதிலளித்த வேளாண் இணை இயக்குநா் விவேகானந்தன், காப்பீட்டு நிறுவனம் பயிா் இழப்பீடு தொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்கிறது. 7 ஆண்டு சராசரி அடிப்படையில் இழப்பீடு நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், தரிசு நிலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி

தோட்டக்கலைப் பயிா்களை சிறப்பாக சாகுபடி செய்த விவசாயிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் பரிசு கொட்டாம்பட்டி வட்டாரம் செ. ராஜா, 2 -ஆம் பரிசு கள்ளிக்குடி வட்டாரம் அ. சூரிய நாராயணன், 3-ஆம் பரிசு தே.கல்லுப்பட்டி வட்டாரம் சீ. ஜெயகிருஷ்ணன் ஆகியோருக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.