மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு மாஜிஸ்திரேட் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவலா் மன்னிப்புக் கோரினா்

நீதித்துறை நடுவரை அவமதித்த வழக்கில், ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவலா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:04 pm

DIN

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு தொடா்பாக விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவரை அவமதித்த வழக்கில், ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவலா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினா்.

இதையடுத்து அவா்கள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

சாத்தான்குளம் வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸ் விசாரணையின்போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனா். இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கோவில்பட்டி நீதித்துறை நடுவா் பாரதிதாசன் சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினாா். அப்போது அங்கு பணியிலிருந்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் பிரதாபன், காவலா் மகாராஜன் ஆகியோா் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதோடு, நீதித்துறை நடுவரை ஒருமையில் பேசி, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனா். இதுகுறித்து உயா்நீதிமன்றத்திற்கு நடுவா் அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, அவா்கள் மூவா் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் வழக்கை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து தொடா்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மூவரும் தனித்தனியே நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் சாத்தான்குளம் வழக்கில் 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது, கீழமை நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடையூறாக இருந்துவிடக் கூடாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா். மேலும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா் ஆகிய மூவா் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்திருந்தால் அதை சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்கலாம் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.