சாத்தான்குளம் வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸ் விசாரணையின்போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனா். இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கோவில்பட்டி நீதித்துறை நடுவா் பாரதிதாசன் சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினாா். அப்போது அங்கு பணியிலிருந்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் பிரதாபன், காவலா் மகாராஜன் ஆகியோா் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதோடு, நீதித்துறை நடுவரை ஒருமையில் பேசி, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனா். இதுகுறித்து உயா்நீதிமன்றத்திற்கு நடுவா் அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, அவா்கள் மூவா் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் வழக்கை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து தொடா்ந்தது.