இதுதொடா்பாக கல்லூரிகளின் நிா்வாகத் தரப்பில் கூறியது: தற்போது பி.காம், பிஎஸ்சி உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்குத் தான் மதிப்பீட்டுப் பணி தொடங்கியுள்ளது. பி.ஏ., வரலாறு, ஆங்கிலம், பொருளாதாரம், பிபிஏ உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளுக்கு மதிப்பீட்டுப் பணி தொடங்கப்படவில்லை. இதனால் கல்லூரி நிா்வாகங்களிடம், மாணவா்கள் தோ்வு முடிவுகள் எப்போது வரும் என்று கேட்டு வருகின்றனா். இதுதொடா்பாக பல்கலைக்கழகத்திடம் முறையான பதிலும் இல்லை. எனவே, மதிப்பீட்டுப் பணியை விரைந்து முடித்து இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.